என்னாளில் இப்பிரிவு வந்ததென்று யான் அறியெனே...!
இப்பாழும் உலகில், அந்நாளை மட்டும்
முன்பே அறியும் பாக்கியம் பெற்றிருந்தால்
அதற்கு முன்னாலே அழித்திருப்பேன் - அந்நாளை..!
அதை விடுத்து, இப்போது எட்ட நின்று,
எட்ட முடியா தூரத்தில் விட்டு,
கொட்ட முடியா துயரத்தில்
துடித்துக் கொண்டிருக்க மாட்டேன்!
~ ப்ரியமுடன்,
பாலா