அலுவலகம், அலுவல்கள்,
அலுவலக சினேகங்கள்,
மற்ற நண்பர்கள்,
குடும்பம்,உறவினர்,
சமூகம், அரசியல்,
விளையாட்டு,பொழுதுபோக்கு,
தூக்கம். . . . .
என இவற்றையெல்லாம் தாண்டி
என்னைப் பற்றி எண்ண
சில மணித்துளிகளே மிச்சமுள்ளன.
அவ்வாறு என்னைப் பற்றி
எண்ணும்போதெல்லாம்
உன்னைப் பற்றிய நினைவுகளை
விலக்க முடிவதில்லை.
அப்போது, உன்னைப் பற்றிய
என் மனதின் கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லாததால்...
இப்போதெல்லாம் நான்
என்னைப் பற்றி
எண்ணுவதில்லை.
-ப்ரியமுடன்,
பாலா