Friday, April 23, 2010

அன்புள்ள சச்சின் . .




நம் தலைமுறைக்கும், நம் முந்தைய பிந்தைய தலைமுறைக்கும் இந்தநாள் வருடத்தில்
ஆனந்தம் தரும் நாள் ..
ஆம், நம் அன்பு சச்சினின் பிறந்தநாள் .. அவரைப்பற்றி பலமுறை கேட்டாலும் , படித்தாலும் இன்னும் ஒரு முறை பேச மனம் படபடக்கும்.

அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியைப்பற்றி கேள்விபட்டாலும், இப்போது தான் பார்க்கிறோம் இந்திய கிரிக்கெட்டின் அமுத சுரபியை - சச்சின் வடிவத்தில்.!!

சச்சினின் கடந்த கால சாதனைகளைக் காட்டிலும், நிகழ்காலச் சாதனைகள் நம்மை பிரம்மிக்க
வைக்கின்றன. ஏனென்றால், வயதால் உடல் தளர்ந்தாலும் மனம் தளராத சாதனைகளே
மனிமகுடத்தின் வைரங்களாய் மின்னும்.

"இங்குள்ள ரசிகர்கள் சென்னை வெல்ல வேண்டும் என்று விரும்பினாலும், சச்சின்
சதம் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்" என்று சென்னை/மும்பை ஐபிஎல் போட்டியில் கவாஸ்கர் சொன்னது எவ்வளவு உண்மை !!

கடந்த ஒரு வருடமாய் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்
சச்சின், இந்த வருடமும் நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று
"சுயநலத்துடன்" இறைவனை வேண்டுகிறேன்..!
~ ப்ரியமுடன்,
பாலா


No comments:

Post a Comment